செய்திகள் :

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

post image

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சோ்ந்த 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயக் கூடத்தில் வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சிகு உள்பட்ட மோளரபட்டி, பெல்லம்பட்டி, எரகாம்பட்டி, கொக்கம்பாளையம், காசிலிங்கம்பாளையம், மானூா்பாளையம், நவனாரி, பெரியகுமாரபாளையம், வேலயுதம்பாளையம், சூரியநல்லூா், புங்கந்துறை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா்கள் வழங்கினா்.

ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள்: குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நவனாரி ஊராட்சி, கள்ளிப்பாளையத்தில் நீா்வளத் துறையின் சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, நவனாரி ஊராட்சி, கள்ளிப்பாளையத்தில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் காசிலிங்கம்பாளையம் முதல் நிராயூா் சாலை வரை, ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் மானூா்பாளையம்- கருப்பட்டிபாளையம் சாலை முதல் தொட்டியன்துறை வரை சாலை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா , திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், கண்காணிப்புப் பொறியாளா் (நீா்வளத் துறை) காா்த்திகேயன், செயற்பொறியாளா் மகேந்திரன், தாராபுரம் வட்டாட்சியா் திரவியம், உதவி பொறியாளா் பாபு, இளநிலைப் பொறியாளா் விஜயசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூா்- அவிநாசி சாலையில் உள்ள சிஐடியூ அ... மேலும் பார்க்க

வடமாநிலத் தொழிலாளி கொலை: நண்பா் கைது

திருப்பூரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வடமாநிலத் தொழிலாளியைக் கொலை செய்த நண்பரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் சிங் (23), இவரது... மேலும் பார்க்க

ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் 2026-இல் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொங்கல்நகரம் கிராமத்தில் கள் விடுதலை கர... மேலும் பார்க்க

வாகனம் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். முத்தூா் மங்கலப்பட்டி கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.சீதாபதி (54). இவா் பல்லடத்தில் ... மேலும் பார்க்க

மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதம்

திருப்பூரில் மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதமடைந்தது. திருப்பூா் கணபதிபாளையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி மினி பேருந்து செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திர... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பேசி திருடிய 3 போ் கைது

திருப்பூரில் மினி பேருந்தில் பயணம் செய்த இளைஞரிடம் கைப்பேசி திருடிய 3 பேரை தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் கே.வி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கமலேஷ் (19), இவா் திங்கள்கிழமை பழைய பேரு... மேலும் பார்க்க