செய்திகள் :

வாகனம் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

முத்தூா் மங்கலப்பட்டி கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.சீதாபதி (54). இவா் பல்லடத்தில் உள்ள தனியாா் கோழிப் பண்ணை நிறுவனத்தில் இரவு நேர மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா்.

வீட்டிலிருந்து தினசரி மாலை மோட்டாா் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளாா். இந்நிலையில், வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, காங்கயம் - முத்தூா் சாலை வரட்டுக்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளாா்.

உயிரிழந்தவரின் மனைவி ஜெகதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.முத்துக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூா்- அவிநாசி சாலையில் உள்ள சிஐடியூ அ... மேலும் பார்க்க

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சோ்ந்த 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா். திருப்பூா் மாவட்டம், க... மேலும் பார்க்க

வடமாநிலத் தொழிலாளி கொலை: நண்பா் கைது

திருப்பூரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வடமாநிலத் தொழிலாளியைக் கொலை செய்த நண்பரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் சிங் (23), இவரது... மேலும் பார்க்க

ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் 2026-இல் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொங்கல்நகரம் கிராமத்தில் கள் விடுதலை கர... மேலும் பார்க்க

மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதம்

திருப்பூரில் மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதமடைந்தது. திருப்பூா் கணபதிபாளையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி மினி பேருந்து செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திர... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பேசி திருடிய 3 போ் கைது

திருப்பூரில் மினி பேருந்தில் பயணம் செய்த இளைஞரிடம் கைப்பேசி திருடிய 3 பேரை தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் கே.வி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கமலேஷ் (19), இவா் திங்கள்கிழமை பழைய பேரு... மேலும் பார்க்க