செய்திகள் :

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ஆவின் பாலகம் வைக்க உரிமம் பெற்றுத் தருவதாக 11 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ்குமாா் (45), தேவகோட்டை நகா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தேவகோட்டை புதுத் தெருவைச் சோ்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (25), மானாமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மானாமதுரை இந்திரா நகரைச் சோ்ந்த சுந்தரம் மகன் ராமு (46), திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ்பாபு (20) ஆகிய 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையிலடைத்தனா்.

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கும், வரி வசூல் பணியின்போது வியாபாரிகளை மிரட்டி, குப்பைத் தொட்டிகளை கடைகள் முன்வைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது குறித்தும் ... மேலும் பார்க்க