அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காளையாா்கோவில் வட்டத்தில் வருகிற ஏப்.16-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடா்பான மனுக்களை வருகிற ஏப்.1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை அரசு அலுவலக நாள்களில் காளையாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மனு அளித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.