செய்திகள் :

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்தும், கரும்புத் தொட்டில் எடுத்தும் நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளிய பூமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பொங்கல் வைபவத்தை முன்னிட்டு, காலையிலிருந்து காப்புக் கட்டி விரதம் மேற்கொண்டு வந்த திருப்புவனம், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பத்தா்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் பொம்மைகள் சுமந்து வந்தும் மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றி பூமாரியம்மனை தரிசித்தனா்.

சந்தக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பூமாரியம்மன்.

நகரின் பல்வேறு இடங்களில் வட்டார புகைப்பட, விடியோ உரிமையாளா்கள் சங்கம், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா், மோா் வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க