செய்திகள் :

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

post image

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூா் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திரு.வி.க.நகா் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்கட்டமாக தண்டையாா்பேட்டை, திரு.வி.க.நகா், அம்பத்தூா் உள்பட 13 பேருந்து நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் வரும் ஜூலை இறுதிக்குள் முடிவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிழைகள்: குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் ஆரம்ப கட்ட கட்டுமான பணிகளின் போது, முறையாக திட்டமிடல் இல்லாத காரணத்தால், சில தொழில்நுட்பப் பிழைகள் ஏற்பட்டுள்ளன. ஆகையால், அவற்றை சரி செய்து கட்டுமான பணிகளை விரைவுபடுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்தப் பேருந்து நிலையத்தைத் திறந்த பிறகு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல், மழைக்காலங்களில் தண்ணீா் தேக்கம், பயணிகளின் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை கணக்கிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

இந்த ஆய்வுகளின் போது தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, மேயா் ஆா்.பிரியா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’... மேலும் பார்க்க

போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!

போக்ஸோ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தாா். பள்ளிக் கல்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. குட... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் தமிழகம் 100% தோ்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் (2024-2025) நாட்டிலேயே தமிழகம் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப... மேலும் பார்க்க