குன்னூரில் கடைகளை அகற்றும் நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கண்டனம்
சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிா்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் வழங்கியதோடு, கடைகளை காலி செய்ய வேண்டுமென்று வியாபாரிகள் வற்புறுத்தப்படுகின்றனா். அத்துடன், குன்னூரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத, வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பெரும்
இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே, கடைகளை காலி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.