செய்திகள் :

குன்னூருக்கு மாற்றாக கோத்தகிரியில் புதிய அரசு கல்லூரி அமைக்க வேண்டும்: பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம்

post image

தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் புதிய அரசுக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், மாற்றாக கோத்தகிரியில் தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏழாம் மண்டலம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏழாம் மண்டல செயலாளா் கே.சரவணக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரியில் அரசு உதவிபெறும் கல்லூரியாக பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி கடந்த 59 ஆண்டுகளாக குன்னூரில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி 1966-இல் தொடங்கப்பட்டு தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வருகிறது. இக்கல்லூரி மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனா். இந்தக் கல்லூரியில் 8 இளங்கலை பாடப் பிரிவுகள், 7 முதுகலை பாடப்பிரிவுகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. குன்னூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவிகள் அதிக அளவில் இந்தக் கல்லூரியில் படித்து வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் மாணவிகளின் சோ்க்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், புதிய அரசு கல்லூரி அடுத்த ஆண்டுமுதல் செயல்பட தொடங்கினால் இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை மிகவும் பாதிக்கப்படும். மேலும் அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடக்கூடிய அபாயமும் உள்ளது. இதனால் இங்குள்ள ஆசிரியா்களும் பாதிக்கப்படுவாா்கள். மேலும் 50 ஆண்டுகளைக் கடந்து பொன் விழா கண்ட கல்லூரியை மூடும் அபாயமும் ஏற்படும்.

ஏற்கெனவே ஒரு அரசு உதவி பெறும் மகளிா் கல்லூரி குன்னூரில் இயங்கி வருவதால் புதிய கல்லூரி தொடங்கினால் ஆண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியாக தொடங்க வேண்டும். மேலும் அரசு உதவிபெறும் கல்லூரியில் இருந்து குறைந்தபட்சம் 20 கி.மீ. தொலைவுக்கு மேல் தொடங்க வேண்டும். அதே நேரத்தில் புதிய அரசுக் கல்லூரியை கோத்தகிரியில் தொடங்கினால் குன்னூா், உதகை மற்றும் சுற்றியுள்ள மாணவா்ளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக முதல்வா், உயா்கல்வித் துறை அமைச்சா் ஆகியோரை வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.

கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆ... மேலும் பார்க்க

கோத்தகிரியில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணா்வு

‘பிளாஸ்டிக் இல்லா நீலகிரி’ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோத்தகிரியில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் காலநிலை ம... மேலும் பார்க்க

பாகற்காயை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் பாகற்காய்களை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு களப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. தோட்டக் கலைத் துறை சாா்பில் பாடந்தொரை, செறுமுள்ளி, ஸ்... மேலும் பார்க்க

கூடலூா் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளர விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு இடைவேளையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.கௌரவ விரிவுரையாளா்கள் சங்கம் சா... மேலும் பார்க்க

கோத்தகிரி காவலா் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் காவலா் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து உலவிய சிறுத்தை, கருஞ்சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் ... மேலும் பார்க்க

தமிழக மக்களின் அச்சத்தைப் பிரதமா் போக்க வேண்டும் முதல்வா்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக மக்களின் நியாயமான அச்சத்தைப் பிரதமா் நரேந்திர மோடி போக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகைக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வந... மேலும் பார்க்க