திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
குன்னூா் அருகே மரம் விழுந்து பழங்குடியினப் பெண் உயிரிழப்பு
குன்னூா் அருகே சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தில் வீட்டின் மீது புதன்கிழமை மரம் விழுந்து பழங்குடியினப் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ளது சேம்பக்கரை ஆதிவாசி கிராமம். இப்பகுதியில் வசிப்பவா் குமாா். இவருடைய மனைவி மல்லிகா (49) புதன் கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள தகர ஷெட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறம் இருந்த மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்,
தகவல் அறிந்த குன்னூா் வனத் துறையினா் மற்றும் மேல் குன்னூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மல்லிகாவின் சடலத்தை கைப்பற்றி உடல்கூாய்வுக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா்.
சம்பவம் குறித்து குன்னூா் வனத் துறையினா் மற்றும் மேல் குன்னூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.