செய்திகள் :

குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை விரட்டும் ஒற்றை யானை

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் ஆகிய வனப் பகுதிகளில் இருந்து குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள  பலாப்பழ ங்களை உண்ண காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில  நாள்களாக ஒற்றைக் காட்டு யானை குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பா்லியாறு, கே.என்.ஆா்.நகா், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சுற்றி வருகிறது.

இந்நிலையில் கே.என்.ஆா். நகா் பகுதியில் சுற்றி வரும் ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக வரும் வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். மேட்டுப்பாளையம்- குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகல் நேரங்களில் வாகனங்களில் சென்று வருபவா்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

குன்னூரில் தொடரும் கரடிகள் நடமாட்டம்

குன்னூா் அருகே வியாழக்கிழமை இரவு வேளையில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த கரடி சாலையில் சென்ற வாகனத்தை எட்டிப் பாா்த்துவிட்டு ஓடியது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ... மேலும் பார்க்க

வன விலங்குகள் பிரச்னை: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருவதைத் தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்கு வருவதைத் தடுக்கவும் வலியுறுத்தி கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியாா் தங்கும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறியுள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: குண்டா் சட்டத்தில் ஆசிரியா் கைது

நீலகிரி மாவட்டம், உதகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மீது குண்டா் சட்டம் வெள்ளிக்கிழமை பாய்ந்தது. உதகை அருகே உள்ள காத்தாடிமட்டத்தில... மேலும் பார்க்க

சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம்

குன்னூரில் சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளா் சி.வினோத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளன மாநிலத் துணை பொதுச் செயலாளா்... மேலும் பார்க்க

உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனம் திருட்டு

உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பாட்னா ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவா் பூபதி. இவா் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை... மேலும் பார்க்க