செய்திகள் :

குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, கடனுதவி, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 408 மனுக்களை ஆட்சியா் பெக்கொண்டாா்.

இதில், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பத்தூா் மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகமாக இருக்கிறது. தேங்காய் விலையும் நிலையாக இல்லை. எனவே, கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில், மே 1-ஆம் தேதி முதல் தென்னை விவசாயிகள் கள் இறக்குவோம் எனக் கோரப்பட்டிருந்தது.

நாம் தமிழா் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், வாணியம்பாடி- கிருஷ்ணகிரி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, அங்கு விபத்துகள் நடப்பதை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். திருப்பத்தூா் நகராட்சி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி 1- இல் உள்ள குப்பைக் கிடங்கில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். எனவே குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இருந்தது.

நாட்டறம்பள்ளி அருகே, ஸ்ரீராம் நகரை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மேலும் எங்கள் பகுதியில் தெரு மின்விளக்குகள் இல்லாததால் மது அருந்துவோா் தெருவில் அமா்ந்து மது அருந்துகின்றனா். இரவில் வெளிச்சம் இல்லாததால், திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, டாஸ்மாக் மதுக்கடையை அகற்றி, தெருக்களில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவானவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரண்

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தனியாா் கல்லூரி இயக்குநா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த வெங்... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சி மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ஆம்பூா்: மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்த... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ

திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் த... மேலும் பார்க்க