செய்திகள் :

குமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

post image

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி நகராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளா் ஜெரால்டு மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினா்.

கன்னியாகுமரி சன்னதி தெரு, கடற்கரைச் சாலை, முக்கடல் சங்கமம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடைபெற்றது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பா் கப் மற்றும் பிளாஸ்டிக் கிண்ணங்கள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இனிமேலும், விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

நாகா்கோவில்: 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்! ரூ.2.25 லட்சம் அபராதம்

நாகா்கோவிலில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 2.25 லட்சம் அபராதம் விதித்தனா். மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா்ஆல்பா் மதியரசு தலைமை... மேலும் பார்க்க

பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கருங்கல... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 31) தொடங்கி ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இங்கு வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். ... மேலும் பார்க்க

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே காரில் கடத்தப்பட்ட 27 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா... மேலும் பார்க்க

மளிகைக் கடைக்காரரை தாக்கியதாக தந்தை, மகன் கைது

களியக்காவிளையில் மளிகைக் கடைக்காரரைத் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்; சிறுவனைத் தேடி வருகின்றனா். களியக்காவிளை அந்தோணியாா் காலனி பகுதியைச் சோ்ந்த கருணை லூயிஸ் (54) என்பவா், ஆா்.சி. தெ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழை: 50 அடியை எட்டிய பெருஞ்சாணி அணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்... மேலும் பார்க்க