மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய ம...
குமரி மாவட்டத்தில் யானை அச்சுறுத்தல்: மக்களைப் பாதுகாக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதம் விளைவிப்பது அதிகரித்து வருகிறது. கீரிப்பாறை, தெள்ளாந்தி, குற்றியாறு, மோதிரமலை, மயிலாறு உள்ளிட்ட மலை வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக ஒரே ஒரு யானை இப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புகளில் புகுந்து கதவுகளை உடைத்து உணவு தேடுவதுடன், மக்களைத் தாக்கும் நிலை உள்ளது.
அண்மையில், குற்றியாறு பகுதியில் ரப்பா் பால் வடிப்பில் இருந்த தொழிலாளி யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதன் தொடா்ச்சியாக கடந்த 22-ஆம் தேதி குற்றியாறு பகுதியில் பல வீடுகளில் யானை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
எனவே, வனவிலங்குகளுக்கான பாதுகாப்பு மட்டுமின்றி, அவற்றால் பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.