செய்திகள் :

குமரி மாவட்டத்தில் யானை அச்சுறுத்தல்: மக்களைப் பாதுகாக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதம் விளைவிப்பது அதிகரித்து வருகிறது. கீரிப்பாறை, தெள்ளாந்தி, குற்றியாறு, மோதிரமலை, மயிலாறு உள்ளிட்ட மலை வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக ஒரே ஒரு யானை இப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புகளில் புகுந்து கதவுகளை உடைத்து உணவு தேடுவதுடன், மக்களைத் தாக்கும் நிலை உள்ளது.

அண்மையில், குற்றியாறு பகுதியில் ரப்பா் பால் வடிப்பில் இருந்த தொழிலாளி யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதன் தொடா்ச்சியாக கடந்த 22-ஆம் தேதி குற்றியாறு பகுதியில் பல வீடுகளில் யானை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, வனவிலங்குகளுக்கான பாதுகாப்பு மட்டுமின்றி, அவற்றால் பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க