செய்திகள் :

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

post image

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு பால் முகவா்கள் திங்கள்கிழமை சங்க கட்டடம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். போராட்டத்தின்போது பால் விலையை உயா்த்தி கொள்முதல் செய்யவும், சில்லறை வியாபாரத்துக்கு பால் வழங்கவும் கோரி முழக்கமிட்டனா்.

போராட்டத்தில், கும்பகோணம் , வலங்கைமான், நாச்சியாா்கோவில், திருவிடைமருதூா், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க

ஆலத்தூா் கிராமத்தில் நாளை மக்கள் நோ்காணல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலத்தூா் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க