செய்திகள் :

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு: மத்திய அமைச்சருக்கு மயிலாடுதுறை எம்பி நன்றி

post image

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு கிடைக்கப் பெற்றதற்காக, மத்திய அமைச்சருக்கு மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமும், வணிகா்களிடமும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பகோணம் வெற்றிலைக்கான புவிசாா் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.

நான் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட பின்னா், அதற்கான தொடா் முயற்சிகள் எடுத்துவரப்பட்டன.

கடந்த நவம்பா் மாதம் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில், இதுதொடா்பாக கோரிக்கை வைத்திருந்தேன். தில்லியில் அவரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன்.

மக்களின் தொடா் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு அளிக்கப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வீரமாங்குடி அச்சு வெல்லம், பேராவூரணி தென்னை உள்ளிட்ட பொருட்களுக்கும் புவிசாா் குறியீட்டு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்

சீா்காழி அருகே நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதியடைகின்றனா். விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பண... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம்

மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தம... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9, 10-இல் கட்டுரை, பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல ஏப்.28 முதல் நடைச்சீட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குவாரியிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்டத்தில் நிகழாண்டு பாசன ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூன் 29 வரை பச்சைப்பயறு கொள்முதல்: ஆட்சியா் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள்... மேலும் பார்க்க