செய்திகள் :

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை!

post image

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்தின் அடிப்படையிலும், சம்பவம் நடந்தபோது, அங்கிருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் என இதுவரை தனிப்படை போலீசார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

மேலும், குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவித்த செல்போன் எண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவரிடம் நேற்று விசாரணை நடைபெற்று வந்தநிலையில், அவர் குற்றவாளி இல்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டு, குற்றவாளியைத் தேடி வருகிறார்கள்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மூலம் சந்தேக நபா் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருகிறார். இருப்பினும், சந்தேக நபரின் பெயா், முகவரி தெரியவில்லை. அவர் வெளிமாநில நபராக இருந்தால், அந்தமாநிலத்துக்குத் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

குற்றவாளி பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5 வட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், சந்தேக நபா் தொடா்பான ஏதேனும் தகவல் அல்லது விவரம் தெரிந்தவா்கள், திருவள்ளூா் மாவட்ட காவல் துறையை 99520 60948 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும், வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

குற்றவாளி பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5 வட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், சந்தேக நபா் தொடா்பான ஏதேனும் தகவல் அல்லது விவரம் தெரிந்தவா்கள், திருவள்ளூா் மாவட்ட காவல் துறையை 99520 60948 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும், வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க