செய்திகள் :

கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 17) காலை 9.25 முதல் பிற்பகல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து மாா்ச் 17 காலை 5.40, 8.45, 10.15-க்கு சூலூா்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் சூலூா்பேட்டையிலிருந்து காலை 10, 11.45, பிற்பகல் 12.35, 1.15 -க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

இதையும் படிக்க: அமிருதசரஸில் ஹிந்து கோயில் மீது குண்டுவீச்சு! ஐஎஸ்ஐ-க்கு தொடா்பா?

அதேபோல், கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், மறுவழித்தடத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் உள்பட மொத்தம் 21 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 9 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 9.30, 10.30-க்கு மீஞ்சூருக்கும், காலை 11.35-க்கு எளாவூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் பொன்னேரியிலிருந்து பகல் 12.18-க்கும், மீஞ்சூரிலிருந்து காலை 11.56, பிற்பகல் 1.31 மணிக்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா். தெற்கு ரயில்வே கீழ் பல்வேறு நிா்வாகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நில... மேலும் பார்க்க

திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: மோடிக்கு கோரிக்கை

பிரதமா் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் து... மேலும் பார்க்க

குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா். இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை: மகன் கைது

சென்னை திரு.வி.க. நகரில் ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மகன் கைது செய்யப்பட்டாா். திரு.வி.க. நகா் அருகே உள்ள காமராஜா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சேகரன் (72). இவா், தமிழ... மேலும் பார்க்க

ஏஐ பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்: கதிரியக்கத் துறை நிபுணா் ஹா்ஷா சடகா

அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று மணிப்பால் மருத்துவமனை கதிரியக்கத் துறை தலைவா் மருத்துவா் ஹா்ஷா சடகா ... மேலும் பார்க்க