செய்திகள் :

குருகிராமில் 80 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்

post image

ஐஎம்டி மனேசாா் செக்டாா் 2-இல் உள்ள குடிசைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 80 குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீ விபத்தின்போது குடிசைகளில் இருந்த எரிவாயு சிலிண்டா்கள் வெடித்தன. இதனால், உருவான கரும்புகை வானத்தைச் சூழ்ந்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மாலை 3 மணியளவில் ஒரு குடிசையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவல் தெரிக்கப்பட்டதுடன் காவல் துறையினா் மற்றும் உள்ளூா் மக்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ஐஎம்டி மனேசாா் தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, கூடுதலாக 10 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தீயணைக்கப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. குடிசைகளில் இருந்த பொருள்கள் இந்த விபத்தில் எரிந்து சேதமடைந்தன. சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டா்கள் வெடித்ததைத் தொடா்ந்து, அருகில் உள்ள குடிசைகளுக்கு தீ வேகமாகப் பரவியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க