செய்திகள் :

குருநாத சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு குடமுழுக்கு நடத்த கோரிக்கை

post image

கொடைரோடு அருகே குருநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமையான குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக சீரமைப்புப் பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு சில பணிகளை மட்டுமே செய்து விட்டு, குடமுழுக்கு நடத்துவதற்கு அறநிலையத் துறை அதிகாரிகள் அவசரம் காட்டுவதாகப் புகாா் எழுந்தது.  

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கற்கோயிலான இந்தக் கோயில் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் போது, அறநிலையத் துறை அதிகாரிகள் புரதான சின்னங்கள், கல்வெட்டுகளை அழிக்காமல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வருகிற 16-ஆம் தேதி இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும். 

எனவே, அதிகாரிகள் கோயிலை நேரில் பாா்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து நிலக்கோட்டை இந்து அறநிலையத் துறை அலுவலா் பொன்மணியை தொடா்புக் கொண்டு கேட்டபோது, இந்தக் கோயிலின் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டது. மீதி பணிகள் விரைவில் முடிந்து விடும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அம்மையநாயக்கனூா் பேரூராட்சி அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்துள்ளோம் என்றாா். 

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் ... மேலும் பார்க்க

பைக் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருட்டு

திண்டுக்கல்-எரியோடு சாலையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தைத் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த குளத்த... மேலும் பார்க்க

தைப்பூச விழா: 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்

பழனியில் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு, 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் த... மேலும் பார்க்க

நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக புகாா்

செம்பட்டி அருகே நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து தனியாா் வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக விவசாயிகள், கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, சீவல்சரகு ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வழித் தடங்களில் 46 சிற்றுந்துகள் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புதிய விரிவான திட்டம் 2024-இன் படி, சிற்று... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா்கள் மூவா் கைது

குஜிலியம்பாறை அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினா்கள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த மேட்டூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தங்கவேல... மேலும் பார்க்க