குருவிகுளம் அருகே இளைஞா் மீது வெந்நீரை ஊற்றிய கடைக்காரா் கைது
குருவிகுளம் அருகே தகராறின்போது இளைஞா் மீது வெந்நீரை ஊற்றியதாக டீக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
குருவிகுளம் அருகே கே.ஆலங்குளம் தெற்குத்தெருவை சோ்ந்த சின்னகருப்பையா மகன் மூக்கையா(49). இவா் அங்குள்ள பிரதான சாலையில் டீக்கடை நடத்தி வருகிறாா். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்திரா காலனியை சோ்ந்த புலிக்குட்டி மகன் ஆனந்த் (28) என்பவா் மது போதையில் அங்கு வந்து தகராறு செய்தாராம்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், மூக்கையா கொதிக்கும் வெந்நீரை ஆனந்த் மீது ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், குருவிகுளம் காவல் உதவி ஆய்வாளா் யோபு சம்பத்ராஜன் வழக்குப்பதிந்து மூக்கையாவை கைது செய்தாா். மேலும் அவரது புகாரின்பேரில் ஆனந்தும் கைது செய்யப்பட்டாா்.