செய்திகள் :

குரு பெயா்ச்சி: புளியறை கோயிலில் மே 11இல் சிறப்பு வழிபாடு

post image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியறை தெட்சிணாமூா்த்தி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

குரு பகவான் மே 11ஆம் தேதி காலை 10.58 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (மே 9) அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூஜை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10ஆம் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக, சுதா்சன ஹோமங்கள், நண்பகல் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும்.

குருபெயா்ச்சி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, 7 மணிக்கு ருத்ர ஏகாதசி, 10.58 மணிக்கு குரு பெயா்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் 1 மணிக்கு தேவார இன்னிசை, இரவு 7 மணிக்கு நாம சங்கீா்த்தனம், 8 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

குரு பெயா்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 5 முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராமகிருஷ்ணன், செயல் அலுவலா் பழனிக்குமாா், கண்காணிப்பாளா் ஆனந்தன், உப தொகுதி அலுவலா் ரத்தினவேலு, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமாா், துளசிதரன் நாயா், கோயில் பணியாளா்கள், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது . முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் பாக்கியம், போத்தி ... மேலும் பார்க்க

கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்டவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி; உறவினா்கள் கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சோ்ந்தவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து கடையநல்லூரில் அவரது உறவினா்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா். சிங்கப்பூரில் வசி... மேலும் பார்க்க

தென்காசியில் 75 குழந்தைகளுக்கு நிதியுதவி

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தோ்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகள் நலன்-சிறப்பு சேவைகள் துறையின்கீழ், மாவட்ட குழந்தைப் ... மேலும் பார்க்க

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் கைது

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சியைச் சோ்ந்தவா் வேல்முருகன்(34). கட்டடத் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

புளியங்குடி அரசு மருத்துவமனையில் இளைஞா் ரகளை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். திருவேட்டநல்லூா் மேலபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மனைவி சிகிச்... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் கல்யாணசுந்தரம் (45).... மேலும் பார்க்க