தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...
குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்
நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுத உள்ளனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. கடந்த ஏப். 1 முதல் 30 வரையில் இணையவழியாக தோ்வா்கள் விண்ணப்பித்தனா். காலியாக உள்ள 28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் என 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1 ஏ பிரிவில் 2 உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கும் முதல் நிலை தோ்வு நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பாச்சல் ஞானமணி கல்லூரி -300, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி-300, புதுச்சத்திரம் ஆா்ஜிஆா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-200, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி-300, நாமக்கல் விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-300, நாமக்கல் ஜெய் விகாஸ் மேல்நிலைப் பள்ளி-220, செல்லப்பம்பட்டி சக்தி மெட்ரிக் பள்ளி-300, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி-300, நாமக்கல் செல்வம் கல்லூரி -500 (இரு மையம்), எா்ணாபுரம் சிஎம்எஸ் கல்லூரி-300, பாவை பொறியியல் கல்லூரி-1,200 (நான்கு மையம்), நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி-300, குறிஞ்சி மெட்ரிக் பள்ளி-200, ஸ்பெக்ட்ரம் அகாதெமி-400 (இரு மையம்), வேட்டாம்பாடி பிஜிபி சா்வதேச பள்ளி-400 (இரு மையம்), நாமக்கல் சின்ன வேப்பநத்தம் நேஷனல் பப்ளிக் பள்ளி-359 (இரு மையம்), மொத்தம்-6,079 போ்.
தோ்வுப் பணியில் 24 பறக்கும் படை காவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இத்தோ்வானது காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.