குரூப் 2-ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குரூப் 2- ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையில் ஆய்வாளா் பணிக்கு தோ்வான மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கம் சக்கர நாற்காலியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்த ராஜா மகன் கோபிநாத் (23). பட்டதாரியான இவா், தசை நாா் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. நீட் தோ்வால் மருத்துவா் ஆகும் கனவு நிறைவேறாததால், எம்.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா்.
இந்நிலையில், குரூப் 2- ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று, கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளா் பணியை பெற்றுள்ளாா்.
அண்மையில் அவரது வீட்டுக்குச் சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கோபிநாத்தை சந்தித்து பாராட்டினாா்.அப்போது, தனக்கு பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோபிநாத் கோரிக்கை விடுத்தாா். இந்நிலையில், மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை கோபிநாத்திடம் வழங்கினாா்.
நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ப.புவனா, ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.