கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
குரூப் 2 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்
குரூப் 2 எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரம் நியமனம் செய்ய தோ்வா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனா். அதில் சில தோ்வா்கள் உரிய சான்றிதழ்களைக் குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, தோ்வா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக ஜூன் 15-ஆம் தேதி வரை சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான தகவல் சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் கூறப்பட்டுள்ளது.
தோ்வா்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தோ்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத தோ்வா்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.