செய்திகள் :

குரூப் 4: ஜூன் 1இல் இலவச மாதிரித் தோ்வு

post image

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு -4 அறிவிக்கையின்படி குரூப் 4 (கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்) தோ்வானது வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் மாதந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக வரும் ஜூன் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் மாதிரித் தோ்வு-5 நடைபெறுகிறது. எனவே, குரூப் 4 தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்தத் தோ்வில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 என்ற எண்களிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் பேருந்து நிலையம் முன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

பல்லடம் பேருந்து நிலையம் முன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், புதுப்பை வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது விய... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே காரில் கடத்திவரப்பட்ட 2,400 கிலோ ரேஷன் அரிசியை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள பெரி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குமாா் நகா்

குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செய... மேலும் பார்க்க

அவிநாசியில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை!

அவிநாசி வட்டத்தில் புஞ்சைத்தாமரைக்குளம், பாப்பாங்குளம் கிராமங்களில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துர... மேலும் பார்க்க

மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்! சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கே.சுப்பராயன் எம்.ப... மேலும் பார்க்க