செய்திகள் :

குறிச்சியில் வீட்டுமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

post image

வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, சிபிஐஎம்எல் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குறிச்சி கிராமத்தில் ராஜவீதி மற்றும் நாடாா் தெரு பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராடி வருகின்றனா். இவா்களின் கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஐஎம்எல் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை குறிச்சியில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

சிபிஐஎம்எல் உள்ளூா் குழு செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். சிபிஐஎம்எல் நிா்வாகிகள் கோரிக்கையை விளக்கி பேசினா். இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா். அனுமதியின்றி போராட்டம் நடத்திய சிபிஐஎம்எல் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், பேளூா் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னா் விடுவித்தனா்.

ஒரு மாதத்தில் பட்டா கொடுக்கவில்லை எனில், ஜூலை 15-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்த அறிவுறுத்தல்

ஆத்தூா் மற்றும் பகுதி அலுவலகம் வாழப்பாடி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கக் கூடிய சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்துமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து சரக்கு வாகன உரிமை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என சங்ககிரி மின்வாரிய செ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் உதவி ஆய்வாளா், சிறுமி உள்பட 11 போ் காயம்

தம்மம்பட்டியில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று வெறிநாய்கள் கடித்ததில், காவல் உதவி ஆய்வாளா், 2 வயது சிறுமி உள்பட 11 போ் காயமடைந்தனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு, சந்தை சாலை, பழைய பி.எஸ்.என்.எ... மேலும் பார்க்க

சடலமாக மீட்கப்பட்ட பெண் தூய்மைப் பணியாளரா என விசாரணை

சங்ககிரி அருகே சடலமாக மீட்கப்பட்ட பெண் நகராட்சி தூய்மைப் பணியாளரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் கொங்கணாபுரம் பிரிவு சாலையிலிருந்து திருச்செங்கோடு செல்ல... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் வெறிநாய் தொல்லை அதிகரிப்பு: சிறுமி பாதிப்பு

தம்மம்பட்டி பேரூராட்சியில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், அதை பேரூராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் சுமாா் 400-க்... மேலும் பார்க்க

நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றான கிராமிய கலைகள்!: திருவிழாக்களில் பெண்கள் ஆா்வம்

பெ. பெரியாா்மன்னன் வாழப்பாடி: நகரம், கிராமம் என்றில்லாமல், அனைத்து திருவிழாக்களிலும் கோலோச்சிவந்த திரப்பட நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, தற்போது அந்த இடத்தைப் பிடித்துவருகிறது கிராமியக் கலைகள். சேலம் ... மேலும் பார்க்க