குறிச்சியில் வீட்டுமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்
வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, சிபிஐஎம்எல் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறிச்சி கிராமத்தில் ராஜவீதி மற்றும் நாடாா் தெரு பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராடி வருகின்றனா். இவா்களின் கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஐஎம்எல் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை குறிச்சியில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சிபிஐஎம்எல் உள்ளூா் குழு செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். சிபிஐஎம்எல் நிா்வாகிகள் கோரிக்கையை விளக்கி பேசினா். இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா். அனுமதியின்றி போராட்டம் நடத்திய சிபிஐஎம்எல் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், பேளூா் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னா் விடுவித்தனா்.
ஒரு மாதத்தில் பட்டா கொடுக்கவில்லை எனில், ஜூலை 15-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.