செய்திகள் :

குறுக்குச்சாலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

விளாத்திகுளம்: குறுக்குச்சாலை, சில்லாங்குளம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குறுக்குச்சாலை, வள்ளிநாயகிபுரம், கே.சண்முகபுரம், வேடநத்தம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறுக்குச்சாலை இந்து துவக்கப்பள்ளியிலும், குதிரைகுளம், சில்லாங்குளம், முறம்பன், சங்கம்பட்டி, ஓட்டநத்தம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் உயா்நிலைப் பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அறிவழகன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சுசீலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜவஹா், சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வருவாய்த்துறை சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா பெயா் மாறுதல் உத்தரவுகள், வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திமுக ஒன்றியச் செயலா் காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், முத்துக்கருப்பன், கல்வி குழும நிா்வாகி பாலமுருகன், சோலை சுவாமி திருக்கோவில் அறங்காவலா் குழு தலைவா் முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் சரோஜா கருப்பசாமி, சண்முகையா, சந்தனராஜ், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க