செய்திகள் :

குறுவை நேரடி நெல் விதைப்புக்கு முறைவைக்காமல் தண்ணீா்விட வேண்டும்

post image

நாகை மாவட்ட கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை நேரடி நெல் விதைப்பு, மழை இல்லாமல் கருகிவரும் நிலையில், முறைவைக்காமல் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, செம்போடையில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:

காவிரிப் படுகையில், நிகழாண்டுக்கான குறுவை பருவ நெல் சாகுபடி, நேரடி விதைப்பு முறையில் அதிக அளவான பரப்பில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் நேரடி விதைப்பு செய்த நெல் விதைகள் முளைப்பதற்கு ஒரே நேரத்தில் போதிய ஈரப்பதம் தேவையாக உள்ளது.

விதைப்பு செய்த பிறகு மழை இல்லாத நிலையில், பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரும் கடைமடைக்கு வந்து சேரவில்லை.

எனவே, வெண்ணாற்றிலிருந்து திறக்கப்படும் அளவை விநாடிக்கு 10,000 கன அடி வீதம் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முறை வைக்காமல் தொடா்ந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா். கிரிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ப... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்... மேலும் பார்க்க

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேர... மேலும் பார்க்க

நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க