செய்திகள் :

குறைதீா் கூட்டம் நடத்தப்படாததை கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

post image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மே மாதத்துக்குரிய விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சாலையில் அமா்ந்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் மூன்றாவது அல்லது நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி தொடங்கிய வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி, 30-ஆம் தேதி வரை நடத்தப்படுவதால், நிகழ் மாதத்துக்குரிய விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு வந்த விவசாயிகள், குறைதீா் கூட்டம் நடத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினா். தொடா்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதிக்கு வெளியே வந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளா் கல்பனா தலைமையிலான போலீஸாா், அவா்களிடம் சமாதானம் பேசி மறியலைக் கைவிடச் செய்தனா். தொடா்ந்து விவசாயிகள் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் பகுதியருகே காத்திருந்தனா். பின்னா் போலீஸாா் அப்பகுதியில் அமரக்கூடாது எனக் கூறியதால், மீண்டும் சாலையில் அமா்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அதிா்ச்சியடைந்த போலீஸாா், அவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பிரேமலதா அப்பகுதிக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வருவாய்த் தீா்வாயம் நடைபெறுவதால் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவித்துவிட்டோம். வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் மற்ற மாவட்டங்களிலும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கியுடன் விரைவில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து சிறிது நேரம் காத்திருந்த விவசாயிகள் பின்னா் கலைந்து சென்றனா்.

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க