செய்திகள் :

குறைந்த மதிப்பெண்; பெற்றோருக்கு பயந்து மும்பை கிளம்பிய கர்நாடக சிறுமிகள் - மீட்டது எப்படி?

post image

நடிகர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி மைனர் சிறார்கள் மும்பைக்கு வருவது வழக்கம். ஆனால் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகள் பள்ளி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடி மும்பைக்கு சென்றுள்ளனர்.

கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் இருக்கும் கஸ்தூர்பா நகரில் வசிப்பவர்கள் அந்த இரு சிறுமிகள். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் இரண்டு பேரும் பள்ளியில் நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தனர். இதனால் அவர்கள் தங்களது பெற்றோர் தங்களை கண்டிப்பார்கள் அல்லது அடிப்பார்கள் என்று அச்சம் அடைந்தனர். எனவே இருவரும் வீட்டிற்கு செல்லாமல் நேராக பஸ்ஸில் ஏறி வெளியூருக்கு சென்றனர். பெற்றோர் போன் பண்ணி பேசியபோது டிராயிங் வகுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மைனர் சிறுமிகள் வலையத்திற்குள்

இரண்டு பேரும் பஸ்ஸில் ஏறி ஹூப்ளி சென்றனர். அங்கிருந்து அவர்கள் மும்பைக்கு சென்றுவிட்டனர். இருவரும் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததை கண்டு அவர்களை பெற்றோர் தேட ஆரம்பித்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமிகள் காணாமல் போனது குறித்து அவர்களின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். பேருந்து நிலையத்தில் விசாரித்த போது இரண்டு மைனர் சிறுமிகளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீர்டி செல்வதற்கு எந்த பஸ்சில் ஏறி செல்ல வேண்டும் என்று கேட்ட விவரம் தெரிய வந்தது.

இது குறித்து உள்ளூர் மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் பஸ்சில் ஏறிச்சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் விசாரித்தபோது அவர்கள் மும்பைக்கு சென்று இருப்பது தெரிய வர, உடனே தனிப்படை போலீஸார் மும்பை சென்று இரண்டு மைனர் சிறுமிகளையும் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது பள்ளியில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோர் அடிப்பார்கள் என்று பயந்து வீட்டை விட்டு ஓடியதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் போலீஸார் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தோட்டங்களில் காணப்படும் முடியில்லா 'ஸோம்பி அணில்கள்’ - மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

அமெரிக்காவில் பொதுவாக அழகாகக் கருதப்படும் அணில்கள், தற்போது புண்கள் மற்றும் முடியில்லாமல் ‘ஸோம்பி அணில்கள்’ என்று அழைக்கப்படும் வினோதமான தோற்றத்தில் காணப்படுகின்றன.இந்த அசாதாரண நிலைக்கு ஸ்குரல் ஃபைப்ர... மேலும் பார்க்க

25 கோடி ரூபாய் மதிப்பில் தேநீர் பாத்திரம் - உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக இருப்பது ஏன்?

ஒரு தேநீர் பாத்திரம், பல ஆடம்பர கார்களை விட மதிப்பு மிக்கதாக இருக்க முடியுமா? “தி ஈகோயிஸ்ட்” என்ற இந்த தேநீர் பாத்திரம், உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 2016ஆம... மேலும் பார்க்க

ரூ.2.96 கோடி ஓய்வு பணம்; மனைவியை தவிர்த்து தனியே வாழ்ந்த நபர் - கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

ஓய்வுக்காலத்தில் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ முடிவு செய்த ஒரு ஜப்பானிய ஆணின் கதை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.ஜப்பானைச் சேர்ந்த டெட்சு யமடா என்பவர் தனது 60 வயதில் ஓய்வு பெற்றிருக்கிறார... மேலும் பார்க்க

மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான வெளிநாட்டு இந்தியர்!

இந்தியாவை சேர்ந்த பரிசிட் பலூசி என்பவர் துபாயில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். அவர் மும்பையில் வந்து இறங்க... மேலும் பார்க்க

"என்னை ஏன் திருமணம் செய்தாய்?" - வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கேள்வியும், இந்தியரின் பதிலும்!

இந்தியர் ஒருவர் தனது அமெரிக்க மனைவியிடம், அவரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.அந்த வீடியோவில் வரும் கணவன் மனைவியின் பெயர் அனிக... மேலும் பார்க்க

உ.பி: சட்டமன்ற வளாகத்தில் இடையூறாக நின்ற அமைச்சர் கார் - கிரேன் மூலம் அப்புறப்படுத்திய போலீஸார்!

உத்தரப்பிரதேச சட்டமன்ற வளாகத்திற்குள் அமைச்சர் சஞ்சய் நிஷாத் தனது காரை வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு இருந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அவர் காரை வழக்கமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த... மேலும் பார்க்க