செய்திகள் :

குறைந்த மின்னழுத்தம்: மின்சாதனப் பொருள்கள் பழுது

post image

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது..

கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சிறு,குறு நிறுவனங்கள்,ஆரம்ப சுகாதார நிலையம்,பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது.

இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை முதல் கொரட்டியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் இணைப்புகளுக்கு குறைந்த மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் மின்சாதனப் பொருள்கள் இயங்குவதில்லை. மேலும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகின்றன என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி பழுது காரணமாக குறைபாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து மின் விநியோகம் சீரமைக்கப்படும் என தெரிவித்தனா்.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத... மேலும் பார்க்க