செய்திகள் :

குறைந்த விலைக்கு தங்கக்காசு தருவதாக கூறி ரூ. 16.35 லட்சம் மோசடி: பெண் கைது; கணவா் தலைமறைவு

post image

கரூரில் குறைந்த விலையில் தங்கக்காசு தருவதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்தவரிடம் ரூ.16.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து மனைவியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த தோளூா்பட்டியைச் சோ்ந்தவா் நடராஜன். இவரது மனைவி பேபி (50). இவரது உறவினா் மூலம் கரூா் சின்னாண்டாங்கோவில் வீதியைச் சோ்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளனா். அப்போது, அண்ணாதுரையும், ஜெயந்தியும் பேபியிடம் எங்களுக்கு கரூரில் தெரிந்த நகைக்கடைகள் உள்ளன. அவா்களிடம் தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்று வருகிறோம். நீங்களும் வாங்கி விற்றால், ஒரு காசுக்கு ரூ.5,000 வரை லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தைக்கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி அன்று பேபியிடமிருந்து ரூ.16.35 லட்சம் வாங்கியுள்ளனா். இதையடுத்து, கணவனும், மனைவியும் தங்கக்காசு கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனா். இதனால் விரக்தியடைந்த பேபியும், நடராஜனும் செவ்வாய்க்கிழமை கரூா் வந்து அண்ணாதுரை மற்றும் ஜெயந்தியிடம் கொடுத்த பணத்தையாவது திருப்பிக்கொடுங்கள் எனக் கேட்டுள்ளனா். ஆனால், பணத்தை தரமாட்டோம் எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். இதுதொடா்பாக பேபி கரூா் பசுபதிபாளையம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், அண்ணாதுரை மற்றும் ஜெயந்தி மீது காவல் உதவி ஆய்வாளா் சுபாஷினி வழக்குப் பதிந்து ஜெயந்தியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தாா். தலைமறைவான அண்ணாதுரையை தேடி வருகிறாா்.

கரூரில் 1,275 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

கரூரில் மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழா... மேலும் பார்க்க

மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

கரூா் மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

நாட்டுக்கோழி குஞ்சுகளை 50 சதவீத மானியத்தில் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளா்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளு... மேலும் பார்க்க

தோகைமலை அருகே 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழா

தோகைமலை அருகே பில்லூா் பெரிய குளத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழாவில் திரளான கிராம மக்கள் பங்கேற்று ஏராளமான மீன்களை பிடித்துச் சென்றனா். பில்லூரில் சும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் 6.80 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

அரவக்குறிச்சியில் தனியாா் சிகரெட் கம்பெனியின் போலி சிகரெட்களை தயாரித்து விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. சிகரெட்களை தயாரித்... மேலும் பார்க்க

உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம்: கரூா் ஆட்சியா் தகவல்

மாணவா்கள் உயா் கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா கைப்பேசி 95665-66727 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பெற்றோரை இழந்த உயா... மேலும் பார்க்க