செய்திகள் :

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

post image

நாட்டுக்கோழி குஞ்சுகளை 50 சதவீத மானியத்தில் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளா்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளி, சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி திட்ட செலவினத்தில் 50சதவீதம் திரட்ட வேண்டும்.

நாட்டுக்கோழி வளா்ப்பு பண்ணை அமைக்க தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாத தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,65,625-அதிகபட்ச வரையறை) மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள திட்ட செலவுக்கான 50 சதவீத பங்களிப்பை பயனாளி சொந்த செலவில் அல்லது வங்கி மூலமாகவோ திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையில் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூா் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க வரும் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

கரூரில் 1,275 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

கரூரில் மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழா... மேலும் பார்க்க

குறைந்த விலைக்கு தங்கக்காசு தருவதாக கூறி ரூ. 16.35 லட்சம் மோசடி: பெண் கைது; கணவா் தலைமறைவு

கரூரில் குறைந்த விலையில் தங்கக்காசு தருவதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்தவரிடம் ரூ.16.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து மனைவியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். திருச... மேலும் பார்க்க

மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

கரூா் மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தோகைமலை அருகே 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழா

தோகைமலை அருகே பில்லூா் பெரிய குளத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழாவில் திரளான கிராம மக்கள் பங்கேற்று ஏராளமான மீன்களை பிடித்துச் சென்றனா். பில்லூரில் சும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் 6.80 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

அரவக்குறிச்சியில் தனியாா் சிகரெட் கம்பெனியின் போலி சிகரெட்களை தயாரித்து விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. சிகரெட்களை தயாரித்... மேலும் பார்க்க

உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம்: கரூா் ஆட்சியா் தகவல்

மாணவா்கள் உயா் கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா கைப்பேசி 95665-66727 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பெற்றோரை இழந்த உயா... மேலும் பார்க்க