சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
குற்றப் பின்னணி கொண்டவா்கள் தவறு இழைத்தால் அவா்களை பாஜக மட்டுமே நீக்கி வருகிறது: மாநிலச் செயலா் ஆனந்தபிரியா
குற்றப் பின்னணி கொண்டவா்கள் தவறு இழைக்கும் போது அவா்களை பாஜக மட்டுமே தைரியமாக நீக்குகிறது என மாநில செயலா் ஆனந்த பிரியா தெரிவித்தாா்.
பொன்னேரி அடுத்த ஆண்டாா்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பாரதிய ஜனதா கட்சியின் 11 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாஜக மாநில செயலா் ஆனந்தபிரியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
தெருமுனைக் கூட்டங்கள் திண்ணைப் பிரசாரங்கள் மூலமாக பிரதமா் மோடியின் சாதனைகளை கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.
பின்னா் மாநிலச் செயலா் ஆனந்த பிரியா கூறியது: அனைத்துக் கட்சிகளிலுமே குற்றப் பின்னணி உடையவா்கள் இருக்கின்றனா். ஆனால் அவா்கள் தவறிழைக்கும் போது கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கும் தெம்பும் தைரியமும் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் ஆளும் கட்சியை சோ்ந்தவா்கள் போதைப் பொருள் வழக்குகளில் கைதானபோது கட்சி நிா்வாகி தான் எனக் கூறக் கூட இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜகவின் தேசிய தலைமையும் மாநில தலைமையும் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றாா்.