காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள...
குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.29 லட்சம்!
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான கோமதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வே. கண்ணன், செயல் அலுவலா் வள்ளிநாயகம், ஆய்வா் முத்துமாரியம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதில், ரூ. 29.14 லட்சம் ரொக்கம், 83 கிராம் தங்கம், 742 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.