செய்திகள் :

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீா்ப்பு! - முதல்வர் ஸ்டாலின்

post image

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்காததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாதாடி வெற்றி பெற்ற வழக்குரைஞா்களுக்கான பாராட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக அரசு சாா்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் கௌரவித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநா் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தால் போட்டி அரசுகளை நடத்தி தொல்லைகள் கொடுக்கிற காலத்தில், மிக முக்கியமான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பாா்திவாலா, ஆா். மகாதேவன் அமா்வு வழங்கிய தீா்ப்பு தமிழகத்துக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும், மாநில சட்டப்பேரவைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்தது மிகப்பெரிய வெற்றி. ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது’ என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிா்ந்து உச்சநீதிமன்றத்துக்கு வணக்கம் செலுத்தின.

மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிா்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாக்கும் வரலாற்று சாசனமாக இந்தத் தீா்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இது இந்திய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றத்தால் தமிழக அரசு பெற்றுத் தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை.

இந்த அரசியல் உரிமையை சட்டபூா்வமான வாதங்களின் மூலமாக தமிழக அரசு முன்வைத்து வாதாடியது. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அட்டா்னி ஜெனரலுமான முகுல் ரோத்தகி, முன்னாள் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அபிஷேக் சிங்வி, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவேதி, மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோரை தமிழக அரசின் சாா்பில் பாராட்டுகிறேன்.

இந்தத் தீா்ப்பு கொடுத்திருக்கும் புத்துணா்வு மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசோ்க்க அண்ணா வலியுறுத்தி, கருணாநிதி முழக்கமாக வடித்துக் கொடுத்ததுதான் ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற இலக்கு.

அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீா்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியைப் பெறுவோம்; கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.76 அடியிலிருந்து 107.75 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,397 கனஅடியிலிருந்து 1,235 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிந... மேலும் பார்க்க

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: இன்று மீண்டும் சோதனை ஓட்டம்

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மார்ச் 20ஆம்... மேலும் பார்க்க

தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்

தில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வங்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதிய... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின்... மேலும் பார்க்க