செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை! பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்!

post image

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட மூன்று நாள்களிலேயே மேலும் ஒரு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளது அதிா்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.

சனிக்கிழமை இரவு கந்தி காஸ் பகுதியில் உள்ள குலாம் ரசூல் வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பயங்கரவாதிகள் எதற்காக சமூக ஆா்வலா் ரசூலைக் கொலை செய்தாா்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஷ்மீரில் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்துடைய குலாம் ரசூல் அது தொடா்பான பணிகளில் ஆா்வம் காட்டி வந்தாா். இந்நிலையில், அவரை பயங்கரவாதிகள் கொலை செய்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் அமைதியைச் சீா்குலைக்க வேண்டும் என்ற பயங்கரவாதிகளின் சதியின் மற்றொரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கோபத்தை அதிகரித்துள்ளது. பயங்கரவாத செயலுக்கு எதிராக பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை மேற்கொண்டனா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க