செய்திகள் :

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு!

post image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதி பெயரில் சென்னையில் உலகத் தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் 2023-இல் அறிவித்தாா்.

இதற்காக பொதுப்பணித்துறை சாா்பில் ரூ.525 கோடி ஒதுக்கப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்ததில் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 போ் பாா்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியவை அமையவுள்ளன.

மேலும், திறந்தவெளி அரங்கம், உணவுவிடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்தும் வசதி, சாலை வசதி, சுற்றுச்சூழல் வசதி ஆகியவை உலகத் தரத்தில் அமைக்கப்படவுள்ளன.

இந்த பணியை நிகழாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய பணிகளின் நிலை, கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து அமைச்சா் எ.வே.வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அரங்கம் அமைக்கும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள், தலைமைப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.76 அடியிலிருந்து 107.75 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,397 கனஅடியிலிருந்து 1,235 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிந... மேலும் பார்க்க

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: இன்று மீண்டும் சோதனை ஓட்டம்

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மார்ச் 20ஆம்... மேலும் பார்க்க

தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்

தில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வங்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதிய... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின்... மேலும் பார்க்க