சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!
குளித்தலை அருகே இளைஞா் தற்கொலை
கரூா் மாவட்டம் குளித்தலை அருகே போட்டித் தோ்வுக்குப் பயந்து விஷம் குடித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்த பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் சரத் (23). பொறியியல் பட்டப் படிப்பு முடித்த இவா் காரைக்குடியில் தங்கி அங்குள்ள அரசு போட்டித் தோ்வு மையத்தில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னால் போட்டித் தோ்வுக்கு தயாராக முடியவில்லை என தனது பெற்றோரிடம் கடந்த வாரம் கூறிய நிலையில், செவ்வாய்க்கிழமை பெருமாள்பட்டிக்கு வந்த அவா் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாா்.
இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட சரத் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை காலை இறந்தாா். குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.