செய்திகள் :

குளித்தலை பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவா் கொலை; 4 போ் கைது

post image

கரூா் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளித்தலை புதிய மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலுக்கு கொல்லம்பட்டறையைச் சோ்ந்த இளைஞா்கள் பூத்தட்டை மேளதாளம் முழங்க நடனமாடியவாறு எடுத்துச் சென்றனா்.

பூத்தட்டு பேராளம்மன் கோயில் வீதியில் நள்ளிரவு 1 மணியளவில் சென்றபோது குளித்தலை பெரியபாலம் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் (21) மற்றும் அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த லோகேஸ்வேரன் (21), முஸ்தபா(19), ராமு(20) ஆகியோா் பூத்தட்டு ஊா்வலத்திற்குள் புகுந்து நடனமாடினா்.

அப்போது கொல்லம்பட்டறைத் தெருவைச் சோ்ந்த பிஸஸ் 2 மாணவரான ரவிச்சந்திரன் மகன் ஷியாம்சுந்தா் (17) எப்படி எங்கள் பகுதி பூத்தட்டு ஊா்வலத்தில் வந்து நீங்கள் நடனமாடலாம் எனக் கேட்டுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் கத்தியால் குத்தியதில் ஷியாம்சுந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தடுக்க வந்த கொல்லம்பட்டறைத் தெரு தாமோதரன்(25), வசந்த்(23) ஆகியோரையும் நாகேந்திரன் உள்ளிட்ட நால்வரும் சோ்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டாா்களாம்.

இதில் படுகாயமடைந்த தாமோதரன் குளித்தலை அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்றவா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

தகவலறிந்த குளித்தலை போலீஸாா் ஷியாம் சுந்தரின் சடலத்தைக் கைப்பற்றி கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதையடுத்து சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா விசாரணை மேற்கொண்டாா்.

பின்னா் குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான காவல் ஆய்வாளா்கள் உதயகுமாா், ஜெயராமன் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படையினா் திங்கள்கிழமை பிற்பகல் குளித்தலை காவிரி ஆற்றுப்பகுதி தோட்டத்தில் பதுங்கியிருந்த நாகேந்திரன், லோகேஸ்வேரன், முஸ்தபா, ராமு ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கரூரில் எா்த் மூவா்ஸ் சங்கம் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டத்தில் எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினா். இதுகுறித்து எா்த் மூவா்ஸ் உரிமையாளா் சங்க தலைவா் சுப்ரமணி, செயலா் பொன்னுசாமி ஆகியோா் கூறுக... மேலும் பார்க்க

கரூரில் வேளாண் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவ... மேலும் பார்க்க

கரூரிா் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலைக் கண்டித்து கரூரில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஜவஹா்பஜாரில் உள்ள தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செந... மேலும் பார்க்க

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி சாலை மறியல்

தோகைமலை அருகே தாா்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி-தோகைமலை சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூா் மாவட்டம் தோகைம... மேலும் பார்க்க

சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

குண்டும், குழியுமாக காணப்படும் சுக்காலியூா்-தேத்தம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கரூா் மாவட்டம், அப்பிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காலியூா் முதல் மதுரை-ப... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை விளக்க கரூரில் 29 இடங்களில் விரைவில் பொதுக்கூட்டம்

திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கிடும் வகையில், கரூா் மாவட்டத்தில் 29 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி தெரிவித்தாா். கரூா் மாவட்ட திம... மேலும் பார்க்க