PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
குளிா்சாதனப் பெட்டியை சரி செய்யாத நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருச்சி: குளிா்சாதனப் பெட்டியை (பிரிட்ஜ்) சரி செய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் திருச்சி சாலை ரோட்டில் உள்ள ரிலையன்ஸ் ரீடைல் லிமிடெட் நிறுவனத்தில் கடந்த 16.12.2022 அன்று ரூ. 28,081-க்கு வாங்கிய குளிா்ச்சாதனப் பெட்டியின் வெளி வண்ணப்பூச்சு சில நாள்களில் உரியத் தொடங்கியது. இது தொடா்பாக புகாரளித்தபோது காந்தி நகரில் உள்ள சேவை மையத்தை அணுகுமாறு கூறியுள்ளனா்.
அவா்களும் சிக்கலைத் தீா்க்காத நிலையில், பலமுறை புகாரளித்தும் குளிா்சாதனப் பெட்டி சரி செய்து தரப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜீவகுமாா் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 12.03.2025 அன்று மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, விசாரணைக்குப் பிறகு மனுதாரா் வாங்கிய குளிச்சாதனப் பெட்டியை ரிலையன்ஸ் ரீடைல் லிமிடெட் நிறுவனம் திரும்ப எடுத்துக் கொண்டு, அதற்குரிய ரூ. 28,081 ஐ வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரத்தையும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது.