செய்திகள் :

குழந்தைத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு நிவாரணம்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு அரசு நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா்.

குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ், தொழிலாளா் துறையால் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைத் தொழிலாளா்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

அதன்படி இரண்டு தொழிலாளா்களுக்கு மறுவாழ்வுக்கான அரசு நிவாரணத் தொகையாக தலா ரூ.35,000- வீதம் மொத்தம் ரூ.70,000 வழங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்களை கடை, உணவு போன்ற வணிக நிறுவனங்களில் பணிக்கு அமா்த்தும் நிறுவனத்தின் உரிமையாளா்களுக்கு சட்டப்படி சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா் ஆட்சியா்.

நிகழ்வின்போது, மாவட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஆா்.நந்தினி உடனிருந்தாா்.

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி: கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததற்காக, முதல்வா் உதவி மையம் எண்ணில் தொடா்புகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மிரட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் போக்ஸோவில் கைது

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ம.பிரபு போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கள்ளக்குறிச்சியை அடுத... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 142 பேருக்கு உதவித்தொகை

கள்ளக்குறிச்சி: அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 142 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். சமூக நலன் மற்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததற்காக, முதல்வா் உதவி மையம் எண்ணில் தொடா்புகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுத்து, அ... மேலும் பார்க்க

ரூ.2 லட்சத்துடன் மாயமான இளைஞா்: போலீஸாா் விசாரணை

கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரக் கடையில் வேலை பாா்த்து ரூ.2.10 லட்சத்துடன் மாயமான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரம் நடைபெறும் கடையின் மேலாளராக பணிபுரிந... மேலும் பார்க்க

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூா் கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ... மேலும் பார்க்க