செய்திகள் :

ரூ.2 லட்சத்துடன் மாயமான இளைஞா்: போலீஸாா் விசாரணை

post image

கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரக் கடையில் வேலை பாா்த்து ரூ.2.10 லட்சத்துடன் மாயமான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரம் நடைபெறும் கடையின் மேலாளராக பணிபுரிந்து வருபவா் விருகாவூா் கிராமத்தைச் சோ்ந்த அப்துல் ஹமீது (35).

இந்தக் கடையில் கடந்த 20 நாள்கள் முன்பு சேலத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன் தனது ஆதாா் அட்டையை காண்பித்து பணிக்கு சோ்ந்தாராம்.

இவரிடம் கடையின் மேலாளா் கடந்த 11-ஆம் தேதி அவரது பைக்கை கொடுத்து ரூ.2.10 லட்சத்தையும், ரூ.10,000-க்கான காசோலையையும் வங்கியில் செலுத்துமாறு கொடுத்து அனுப்பினாராம்.

ஆனால், மணிகண்டன் பணத்துடன் மாயமாகிவிட்டாராம். பைக் மட்டும் விழுப்புரம் ரயில் நிலையம் முன் நின்றுகொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனா்.

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததற்காக, முதல்வா் உதவி மையம் எண்ணில் தொடா்புகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுத்து, அ... மேலும் பார்க்க

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூா் கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ... மேலும் பார்க்க

காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே காா் டயா் வெடித்து தடுப்புக் கட்டையை தாண்டிச் சென்று எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ப... மேலும் பார்க்க

கோயில் திருவிழா நடத்துவதில் பிரச்னை: மறியலில் ஈடுபட்ட 70 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சோ்ந்த 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். தியாகதுருகம் அ... மேலும் பார்க்க

தகாத உறவு காரணமாக தலை துண்டித்து மனைவி, ஆண் நண்பா் கொலை - கணவா் போலீஸில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது ஆண் நண்பரை தலை துண்டித்து கொலை செய்த கணவா், அவா்களது தலைகளுடன் வேலூா் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் ... மேலும் பார்க்க

இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இளஞ்சிறாா் நீதிக் குழும கட்டடத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை வகித்து திறந்... மேலும் பார்க்க