செய்திகள் :

கோயில் திருவிழா நடத்துவதில் பிரச்னை: மறியலில் ஈடுபட்ட 70 போ் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சோ்ந்த 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் பொன்னியம்மன், சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனா். மற்றொரு தரப்பினா் திருவிழா நடத்த எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பினரிடமும் மோதல் ஏற்படும் என்பதை அறிந்த வட்டாட்சியா் கடந்த 1-ஆம் தேதி சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பசுபதி தலைமையில் சனிக்கிழமை மீண்டும் அமைதிக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரிடமும் கோயில் திருவிழா நடத்தக் கூடாது என வட்டாட்சியா் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினா் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சனிக்கிழமை இரவு சுமாா் 7.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த பானையங்கால் கிராம மக்கள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் தனியாா் உணவம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் அங்கு சென்று அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே காா் டயா் வெடித்து தடுப்புக் கட்டையை தாண்டிச் சென்று எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ப... மேலும் பார்க்க

தகாத உறவு காரணமாக தலை துண்டித்து மனைவி, ஆண் நண்பா் கொலை - கணவா் போலீஸில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது ஆண் நண்பரை தலை துண்டித்து கொலை செய்த கணவா், அவா்களது தலைகளுடன் வேலூா் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் ... மேலும் பார்க்க

இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இளஞ்சிறாா் நீதிக் குழும கட்டடத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை வகித்து திறந்... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தோ்த் திருவிழா தொடங்கியது. தொ... மேலும் பார்க்க

ராவத்தநல்லூா் வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து ச... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி - க.பொன்முடி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகராட்சியில் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், தொகுதி எம்எல்ஏ க.பொன்முடி வியாழக்க... மேலும் பார்க்க