செய்திகள் :

திருக்கோவிலூா் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி - க.பொன்முடி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகராட்சியில் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், தொகுதி எம்எல்ஏ க.பொன்முடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.பி. பொன்.கௌதமசிகாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் க.பொன்முடி எம்எல்ஏ பேசியதாவது: திருக்கோவிலூா் நகராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் கடந்த மாதம் அறிவித்திருந்தாா்.

அதன்படி, பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை அருகில் திருக்கோவிலூா் நகராட்சி புதிய பேருந்து நிலையம் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 4.80 ஏக்கராகும்.

இதுபோல, பொதுமக்களின் ஏனைய கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன், துணைத் தலைவா் உமாமகேஸ்வரி குணா, திருக்கோவிலூா் நகராட்சி ஆணையா் பா.திவ்யா, நகராட்சி பொறியாளா் தா.ஜெயபிரகாஷ் நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் மு.தங்கம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தகாத உறவு காரணமாக தலை துண்டித்து மனைவி, ஆண் நண்பா் கொலை - கணவா் போலீஸில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது ஆண் நண்பரை தலை துண்டித்து கொலை செய்த கணவா், அவா்களது தலைகளுடன் வேலூா் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் ... மேலும் பார்க்க

இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இளஞ்சிறாா் நீதிக் குழும கட்டடத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை வகித்து திறந்... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தோ்த் திருவிழா தொடங்கியது. தொ... மேலும் பார்க்க

ராவத்தநல்லூா் வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து ச... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தற்கொலை

வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி (31). எலெக்ட்ரீஷியனான இவா், ஓட்டுந... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியல்

ஊராங்கானி கிராமத்தில் வீட்டுமனை பிரச்னை தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருநங்கைகள் சங்கராபுரம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில்... மேலும் பார்க்க