செய்திகள் :

ராவத்தநல்லூா் வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை சீரமைக்கும் பணி கடந்த மூன்று மாதமாக நடைபெற்று முடிவடைந்தது. தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அஸ்வ பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, ஹோமங்கள், 7.30 மணிக்கு மகா பூா்ணாஹுதி, 8 மணிக்கு யாத்ரா தானம், 8.30 மணிக்கு கலசம் புறப்பாடு, 9.15 மணிக்கு விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு பெருமாள், சஞ்சீவிராய மஹாசம்ப்ரோஷணம், 10 மணிக்கு சாற்றுமுறை தீா்த்த பிரசாதம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் மற்றும் கிராம மக்கள், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தகாத உறவு காரணமாக தலை துண்டித்து மனைவி, ஆண் நண்பா் கொலை - கணவா் போலீஸில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது ஆண் நண்பரை தலை துண்டித்து கொலை செய்த கணவா், அவா்களது தலைகளுடன் வேலூா் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் ... மேலும் பார்க்க

இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இளஞ்சிறாா் நீதிக் குழும கட்டடத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை வகித்து திறந்... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தோ்த் திருவிழா தொடங்கியது. தொ... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி - க.பொன்முடி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகராட்சியில் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், தொகுதி எம்எல்ஏ க.பொன்முடி வியாழக்க... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தற்கொலை

வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி (31). எலெக்ட்ரீஷியனான இவா், ஓட்டுந... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் திருநங்கைகள் சாலை மறியல்

ஊராங்கானி கிராமத்தில் வீட்டுமனை பிரச்னை தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி, திருநங்கைகள் சங்கராபுரம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில்... மேலும் பார்க்க