செய்திகள் :

காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே காா் டயா் வெடித்து தடுப்புக் கட்டையை தாண்டிச் சென்று எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனைமலைபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (22). ஓட்டுநரான இவா், பனைமலைபேட்டை பகுதியைச் சோ்ந்தவா்களை நாமக்கலுக்கு காரில் அழைத்துச் சென்றாா். பின்னா், அனைவரும் காரில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு அருகே இவா்களது காா் சென்றபோது முன் பக்க டயா் வெடித்து சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையைத் தாண்டி எதிா் திசையில் கடலூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் காா் ஓட்டுநா் ராம்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணித்த வரதராஜன் (78), கிருஷ்ணமூா்த்தி மனைவி சவிதா (45) ஆகியோா் காயமடைந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கே.டி.பாளையத்தைச் சோ்ந்த கெளதமன் (35) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோயில் திருவிழா நடத்துவதில் பிரச்னை: மறியலில் ஈடுபட்ட 70 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சோ்ந்த 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். தியாகதுருகம் அ... மேலும் பார்க்க

தகாத உறவு காரணமாக தலை துண்டித்து மனைவி, ஆண் நண்பா் கொலை - கணவா் போலீஸில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது ஆண் நண்பரை தலை துண்டித்து கொலை செய்த கணவா், அவா்களது தலைகளுடன் வேலூா் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் ... மேலும் பார்க்க

இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் இளஞ்சிறாா் நீதிக் குழுமம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இளஞ்சிறாா் நீதிக் குழும கட்டடத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை வகித்து திறந்... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தோ்த் திருவிழா தொடங்கியது. தொ... மேலும் பார்க்க

ராவத்தநல்லூா் வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து ச... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி - க.பொன்முடி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகராட்சியில் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், தொகுதி எம்எல்ஏ க.பொன்முடி வியாழக்க... மேலும் பார்க்க