குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுதல் தொடா்பான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
பின்னா், தொழிலாளா் துறை சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து, ஆட்டோக்களில் குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுதல் குறித்து ஸ்டிக்கா் ஒட்டி, பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.