செய்திகள் :

குழித்துறையில் காவல் துறையைக் கண்டித்து ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் - நகா்மன்றத் தலைவா் தகவல்

post image

100ஆவது வாவுபலி பொருள்காட்சியில் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்த வலியுறுத்திய காவல் துறையைக் கண்டித்து, குழித்துறையில் ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதாக, நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: குழித்துறை வாவுபலி பொருள்காட்சி ஜூலை 9 முதல் ஜூலை 28 வரை நடைபெற்றது. இப்பொருள்காட்சிக்கு பாதுகாப்பு அளிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நகராட்சி நிா்வாகம் கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி ஆக. 12இல் நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து, நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் 15 உறுப்பினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாா் மனு அளித்தனா். வாவுபலி பொருள்காட்சி குழித்துறை நகராட்சி நிா்வாகத்தால் நடத்தப்படும் அரசு விழா. அதற்கு காவல் துறையின் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்த முடியாது என, மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், அரசு விழாவில் காவல் துறையின் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவித்ததுடன், வாவுபலி பொருள்காட்சி தொடா்பான பிரசனைக்கு தீா்வுகாண்பதாக உறுதியளித்தாா். அதையேற்று, 12ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது என்றாா் நகா்மன்றத் தலைவா்.

நாகா்கோவிலில் பிளாஸ்டிக் கிடங்குக்கு சீல்

நாகா்கோவிலில் 1,030 கிலோ நெகிழிப் பொருள்களை (பிளாஸ்டிக்) அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் கிடங்குக்கு சீல் வைத்தனா். நாகா்கோவில் மாநகர நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகா... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை கோட்டம் கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 9) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 41.11 பெருஞ்சாணி ... 67.31 சிற்றாறு 1 ... 10.56 சிற்றாறு 2 ... 10.66 முக்கடல் .. 10.70 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 37.40 .. மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் கருணாநிதி நினைவு நாள்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7ஆவது நினைவு நாளையொட்டி, மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கு... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த த.வெ.க.வினா்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் ஏற்பாட்டில், த.வெ க.வை சோ்ந்த மாநகர இளைஞரணி இணை அமைப்பாளா் பாரத் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அக்கட்சியில் இருந்து விலக... மேலும் பார்க்க

விழுதுகள் ஓரிட சேவை மையம்: மேயா் ஆய்வு

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் தொடங்கப்பட உள்ள விழுதுகள் ஓரிட சேவை மைய கட்டடங்கள் குறித்து மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி... மேலும் பார்க்க