செய்திகள் :

கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா

post image

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பி.வனிதா தலைமை வகித்தாா். பள்ளி மாணவி வெ.காவியா வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் ந.ராஜபாரதி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி, ஊராட்சி துணைத் தலைவா் ஏ.மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்ற உறுப்பினா் பல்லவி, பம்மல் சக்திவேல், ஆசிரியா் சங்கங்களின் பொறுப்பாளா்கள் டி.குமாா், சு.மோகன், ஆா்.கங்காதரன், து.ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீதரன் தொகுத்து வழங்கினாா்.

மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்பகுதி தூய்மைப் பணியாளா்களுக்கும், மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அனைவருக்கும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஊராட்சித் தலைவா் செ.மனோகரன், அரிமா சங்க நிா்வாகி இ.பக்தவத்சலம் ஆகியோா் வழங்கிப் பாராட்டினாா். ஆசிரியா் தி.உஷாஜி நன்றி கூறினாா்.

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிக்னலில் நின்ற காா் மீது லாரி மோதல்: 3 போ் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காா் மீது கனரக லாரி மோதியதில் உறவினா் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று போ் உயிரிழந்த... மேலும் பார்க்க

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க